உணர்வையும் இன்று இழந்துவிட்டேன்
காதல் என்னும் அலைகடலில்
நேசம் என்னும் சுக குழியில்
நானும் மூழ்கி படுத்திருக்க
ஒற்றை கயிறாய்
நீயும் உந்தன்
கையை கொடுத்து வெல்வாய்
உயிருடன் நான் கலந்துவிட்டேன்
உணர்வையும் இன்று இழந்துவிட்டேன்
ஆகாயத்தில் நான் மிதக்க
ஆசை கொடிகள் படர்ந்திருக்க
மோகங்கள் எனை சுற்றிவர
உயிருடன் நீயும் நேசம் கொண்டு
என்னை இன்று வெல்வாய்
No comments:
Post a Comment