Tuesday, April 22, 2008

உயிருடன் நான் கலந்துவிட்டேன்

உயிருடன் நான் கலந்துவிட்டேன்
உணர்வையும் இன்று இழந்துவிட்டேன்


காதல் என்னும் அலைகடலில்
நேசம் என்னும் சுக குழியில்
நானும் மூழ்கி படுத்திருக்க
ஒற்றை கயிறாய்
நீயும் உந்தன்
கையை கொடுத்து வெல்வாய்

உயிருடன் நான் கலந்துவிட்டேன்
உணர்வையும் இன்று இழந்துவிட்டேன்

ஆகாயத்தில் நான் மிதக்க
ஆசை கொடிகள் படர்ந்திருக்க
மோகங்கள் எனை சுற்றிவர
உயிருடன் நீயும் நேசம் கொண்டு
என்னை இன்று வெல்வாய்

No comments: