நெஞ்சே என் நெஞ்சே என்னென்று புரியா வதைப்பது ஏனோ
கண்ணே என் கண்ணே காதலின் ஏக்கம் காதலனுள்ளே
அடி குளுகுளு அறையில் முள்ளின் படுக்கையில்
படுக்க சொல்கிறாய் நீயே
என் உடலும் உறைந்து இரத்தமும் கசிந்து
படுத்து சிரிக்கிறேன் நானே
உயிரை கட்டி கூண்டில் அடைத்து சொல்லில் பூட்டினாய் நீயே
பூட்டிய கதவும் திறக்குமென்றேஉன் சொல்லுக்கு விழித்தேன் நானே
இமைகள் மூடிட விழிகள் இருண்டிட நினைவு உதிப்பது உண்மை
விழிகள் விழித்ததும் இருள்கள் கிழிந்ததும் பேச துடித்திடும் இதயம்
கண்ணன் நான் உனை இங்கு பார்க்கவே இதயம் திறந்தேன் பெண்ணே
உனக்கொரு மாளிகை வெளியில் கட்ட பலரும் புகுவர் என்றே
உனக்கும் கட்டினேன் காதல் மாளிகை எந்தன் நெஞ்சுக்குள்ளே
கட்டிய மாளிகை தூணில் அல்ல எந்தன் நரம்பில்தானே
எந்தன் நெஞ்சம் நீயும் உறங்க மெத்தையும் குத்துமேன்றே
எந்தன் சதையை நானும் கிழித்து மெத்தை அமைத்தேன் கண்ணே
No comments:
Post a Comment