Tuesday, April 22, 2008

நெஞ்சே என் நெஞ்சே என்னென்று புரியா வதைப்பது ஏனோ
கண்ணே என் கண்ணே காதலின் ஏக்கம் காதலனுள்ளே

அடி குளுகுளு அறையில் முள்ளின் படுக்கையில்
படுக்க சொல்கிறாய் நீயே

என் உடலும் உறைந்து இரத்தமும் கசிந்து
படுத்து சிரிக்கிறேன் நானே

உயிரை கட்டி கூண்டில் அடைத்து சொல்லில் பூட்டினாய் நீயே
பூட்டிய கதவும் திறக்குமென்றேஉன் சொல்லுக்கு விழித்தேன் நானே

இமைகள் மூடிட விழிகள் இருண்டிட நினைவு உதிப்பது உண்மை
விழிகள் விழித்ததும் இருள்கள் கிழிந்ததும் பேச துடித்திடும் இதயம்
கண்ணன் நான் உனை இங்கு பார்க்கவே இதயம் திறந்தேன் பெண்ணே

உனக்கொரு மாளிகை வெளியில் கட்ட பலரும் புகுவர் என்றே
உனக்கும் கட்டினேன் காதல் மாளிகை எந்தன் நெஞ்சுக்குள்ளே
கட்டிய மாளிகை தூணில் அல்ல எந்தன் நரம்பில்தானே

எந்தன் நெஞ்சம் நீயும் உறங்க மெத்தையும் குத்துமேன்றே
எந்தன் சதையை நானும் கிழித்து மெத்தை அமைத்தேன் கண்ணே

உயிருடன் நான் கலந்துவிட்டேன்

உயிருடன் நான் கலந்துவிட்டேன்
உணர்வையும் இன்று இழந்துவிட்டேன்


காதல் என்னும் அலைகடலில்
நேசம் என்னும் சுக குழியில்
நானும் மூழ்கி படுத்திருக்க
ஒற்றை கயிறாய்
நீயும் உந்தன்
கையை கொடுத்து வெல்வாய்

உயிருடன் நான் கலந்துவிட்டேன்
உணர்வையும் இன்று இழந்துவிட்டேன்

ஆகாயத்தில் நான் மிதக்க
ஆசை கொடிகள் படர்ந்திருக்க
மோகங்கள் எனை சுற்றிவர
உயிருடன் நீயும் நேசம் கொண்டு
என்னை இன்று வெல்வாய்

My 3rd lyrics

தேவதையே தேவதையே
என் முன்னே வந்தாயே வந்தாயே

பௌர்ணமியே பௌர்ணமியே
நீ இன்று தேயாதே தேயாதே

காதலியே காதலியே
நீ என்னை காதலியே காதலியே

நினைவோடு நினைவாகி
எந்தன் உயிரோடு கலந்தாயே

காலங்கள் கண்ணோடு
உயிர் தாளங்கள் நெஞ்சோடு

பாதைகள் உன்னோடு
என் காதல் உன் கண்ணோடு

கீதங்கள் இசையோடு
என் தேகங்கள் உன்னோடு
காத்திருந்தேன் உனக்காக
உயிர் துடித்திருக்கும் மனதோடு

அடி சகியே சுகம் தரும் தீவே
நிலவே நினைவின் உயிரே வா வா !!

My 2nd lyrics

ஏதேதோ ! ஏதேதோ !
நெஞ்சில் கண்டேன்
இதயம் திறந்தேன்
உலா சென்றேன்

ஒரு தென்றல்
புயலாய் வருமோ
நெஞ்சை அல்லுமோ
காதல் சொல்லுமோ !


கள்ளி வந்தாலே
அள்ளி சென்றாலே
என்னை கொண்டாலே

அவள்தானா என் தேவதை
அவள்தானா என் தேவதை

மறந்து நின்றேன் என்னை இழந்தேன்
காதல் கொண்டேன் நெஞ்சே நெஞ்சே
நான் கண்டேன் வெல்வேன் வெல்வேன்


ஹே ஹேய் எஅய் எஅய் ! என் அன்பே !!
என் செய்வேன் என் நெஞ்சே !!

My first song (2000)

எங்கே என் அன்பே
என் சுவாச காற்றே
என் ஜீவன் நீயே
என் அன்பே !!

நான் உடலோடு பிறந்தேன்
உன்னோடு வாழ்வேன்
என் உயிரும் நீயே
என் அன்பே !!

வெறும் வாழ்வென வெறுத்திருந்தேன்
ஒரு காட்சியில் புது தீர்தமிட்டாய்
என் காதலை உரைத்துவிட்டேன்
உன் பாதையில் காத்திருப்பேன்
இரவுக்கு வெளிச்சம் தந்துவிடு
உன் உயிரையும் எனக்குள் பாயத்துவிடு - உயிரே !!

உன் வருகையில் என் உயிர் இருக்கும்
அது தவறினால் என் உடல் இருக்கும்
உனை விழிகள் தேடி திரிகிறதே
என் இரவெல்லாம் இன்று விடிகிறதே
ஒரு வார்த்தையை எனக்கு கொடுத்துவிடு
அடி காதல் வலையில் மீட்டிவிடு - உயிரே !!
அந்தி மாலை பொழுதும்
மோகங்கள் கொள்ள
மொட்டுக்கள் மெல்ல
தேன் சிந்தி மலரும்...

வரும் பாதை பார்த்தே
காலங்கள் கடத்த
கிடைக்கின்ற இன்பம்
சுகமானது...

நாள்தோறும் அவளை
மனதோடு நினைத்து
செய்கின்ற சரசம்
இனிதானது...

காத்திருக்கும் கண்கள்
தீர்த்தங்கள் தரவே
இன்பங்கள் பொங்க
வந்தாயே மானே !

பார்வைகள் மோத
கீதங்கள் இசைக்க
அலைபாயும் உள்ளம்
உன்னோடுதான் !!

சின்னஞ்சிறு சிரிப்பும்
பூத்துவிடு கண்ணே
அதற்காக தானே
ஏங்கினேன் நானே...

மறைவில் எனை பார்த்து
நகைக்கிறேன் கண்ணே
அதுபோதும் பெண்ணே
என் ஜீவன் நனையும்...

காதலர்கள் நெஞ்சம்
சிறகடித்து பறக்க
பிரிக்கின்ற காலம்
மாறாதது...

பிரிவொன்று நேர
இதயங்கள் துடிக்கும்
ஆனாலும் நேசங்கள்
முடியாதது...

காதல் எனும் சுவாசம்
செய்யுமே வாசம்
உந்தன் நினைவாலே
வாழ்வேன் நானே
என் காதல் உன்னோடுதான் !!

My 11th std poem (1998)

The Spread of the Sky with Clouds may change
The Elevation of the Sea with Waves may change
The Epics denoting the Periods may change
The philosophical Ethics denoting the Religions may change
But, My Sweet Heart
The love for you of this
Ever changing heart will never change
.
மேகங்கள் மறையலாம்
வானங்கள் மறையுமோ?
பாதைகள் இருளலாம்
பகல்கள் இருளுமோ?
சொந்தங்கள் முடியலாம்
பந்தங்கள் முடியுமோ?
வார்த்தையை மறக்கலாம்
நெஞ்சங்கள் மறக்குமோ?
காற்றுக்கு முடிவுண்டு
நினைவிற்கு முடிவில்லை...
காத்துகொண்டிருக்கிறேன் உனக்காக
நீ மறந்த அந்த வார்த்தைகளின் நினைவில் !!