Tuesday, March 17, 2015

கானல் பிரிவு

கவிதை எழுத நினைக்கின்றேன்
ஆனால் என்னால் முடியவில்லை...
உன் முகம்  தோன்றும் அளவிற்கு
வார்த்தைகள் என்னுள் தோன்றவில்லை...
ஒவ்வொரு நாளும், நீ
என்னோடு பேசுவாய் என்றெண்ணி
இன்று கானல் கனவோடு நிற்கிறேன்...!!
அடி, நீ என்னுள் இட்டது
அமுதமும் அல்ல,
விஷமும் அல்ல,
பனிக்கட்டி கத்தி...
களித்த இடங்களை எல்லாம்
குளிர்ந்த மனதோடு பார்த்துக்கொண்டே
நான் உறைந்து சாகிறேன் !
உன்னை கேட்பது
பழைய உறவும் அல்ல -
அது உனக்கு கஷ்டம் என்று தெரியும்,
இறந்ததை புதுப்பிக்கவும் அல்ல -
அதில் உனக்கு இஷ்டம் இல்லை என்றும் தெரியும்,
ஆனால் ஒன்றே ஒன்றுதான்
தூக்கு தண்டனை கைதிக்கும் இறுதி ஆசை உண்டு;
உன்னை நான் தடுக்கவில்லை
உன் பிரிவின் காரணம்  சொல்;
அது ஒன்றே போதும் - என்
மனதை நான் பக்குவபடுத்திக்கொள்ள...!!
இன்னும் பல சொல்ல ஆசைதான் - தற்போது
உன் எண்ணம் தொட்டவரை
இதுவே வெறும் காகிதம்தான்...
உன் நேரத்தை இனியும் வீணாக்க மாட்டேன்...
நன்றி !!

No comments: