என் இனிய தோழிக்கு ஒரு தோழன் எழுதுவது...
இரவு நித்திரையின் போதும்,
நிரம்பிய வயிரின் ஒய்வுபோதும்,
என்னை நான் நினைக்கும்போதும்,
என் மனதின் அடி ஆழத்திலிருந்து ஏதோ ஒன்று
கிடைத்தும் கிடைக்காமல் ,
தொலைந்தும் தொலையாமல் இருப்பதுபோல்
ஓர் உணர்வு !!
சந்தித்த நாட்களும் சரி,
சண்டையிட்ட நாட்களும் சரி...
காத்திருந்த நாட்களும் சரி,
பேசிய நாட்களும் சரி...
ஒவ்வொரு கணமும் திருவிழா நாட்களாய்
என் மனதில்!!
வெறும் நட்பு என்றும் சொல்ல இயலாமல் ,
அன்பே என்றும் அழைக்க இயலாமல் ,
மீண்டும் உன் உறவுக்காக காத்திருக்கிறேன்
அந்த திருவிழாக்காக !!
No comments:
Post a Comment