Tuesday, March 17, 2015

மனதின் ஈரம்

அதே இரவுதான்
இதே நேரம்தான்
அவள் வடித்த கண்ணீரை
நான் நினைத்தது...

அதுவரை ஈர மண்ணில் முளைத்த
பனையாய் இருந்த என் மனம்
முதன் முதலாய் தளர ஆரம்பித்தது...

நாட்கள் செல்ல செல்ல
ஒவ்வொரு நிமிடமும்
கேள்விகள் உதிக்க ஆரம்பித்தன...

உறுதியாய் இருந்த என் மனதில்
தேனிக்கள் கூடு கட்ட தொடிங்கியது;
அவற்றின் வலியில் துடிப்பதா
இல்லை தேனை சுவைப்பதா
தெரியவில்லை....

கண்ணீர் கரையான்களால் அரிக்கப்பட்டேன் !
என்னை நானே கேட்டுக்கொண்டேன்
ஏன் இந்த தயக்கம்,
ஏன் இந்த கலக்கம்;
விடைகள் புரியவில்லை...

புத்தியில் உண்மை புரிந்தாலும்
நினைவுக்கு வருவதோ
அவள் வடித்த கண்ணீர்தான் !!


நடுநிசி ஏக்கம்


என் இனிய தோழிக்கு ஒரு தோழன் எழுதுவது...
இரவு நித்திரையின் போதும்,
நிரம்பிய வயிரின் ஒய்வுபோதும்,
என்னை நான் நினைக்கும்போதும்,
என் மனதின் அடி ஆழத்திலிருந்து ஏதோ ஒன்று
கிடைத்தும் கிடைக்காமல் ,
தொலைந்தும் தொலையாமல் இருப்பதுபோல்
ஓர் உணர்வு !!

சந்தித்த நாட்களும் சரி,
சண்டையிட்ட நாட்களும் சரி...
காத்திருந்த நாட்களும் சரி,
பேசிய நாட்களும் சரி...
ஒவ்வொரு கணமும் திருவிழா நாட்களாய்
என் மனதில்!!

வெறும் நட்பு என்றும் சொல்ல இயலாமல் ,
அன்பே என்றும் அழைக்க இயலாமல் ,
மீண்டும் உன் உறவுக்காக காத்திருக்கிறேன்
அந்த திருவிழாக்காக !!

கானல் பிரிவு

கவிதை எழுத நினைக்கின்றேன்
ஆனால் என்னால் முடியவில்லை...
உன் முகம்  தோன்றும் அளவிற்கு
வார்த்தைகள் என்னுள் தோன்றவில்லை...
ஒவ்வொரு நாளும், நீ
என்னோடு பேசுவாய் என்றெண்ணி
இன்று கானல் கனவோடு நிற்கிறேன்...!!
அடி, நீ என்னுள் இட்டது
அமுதமும் அல்ல,
விஷமும் அல்ல,
பனிக்கட்டி கத்தி...
களித்த இடங்களை எல்லாம்
குளிர்ந்த மனதோடு பார்த்துக்கொண்டே
நான் உறைந்து சாகிறேன் !
உன்னை கேட்பது
பழைய உறவும் அல்ல -
அது உனக்கு கஷ்டம் என்று தெரியும்,
இறந்ததை புதுப்பிக்கவும் அல்ல -
அதில் உனக்கு இஷ்டம் இல்லை என்றும் தெரியும்,
ஆனால் ஒன்றே ஒன்றுதான்
தூக்கு தண்டனை கைதிக்கும் இறுதி ஆசை உண்டு;
உன்னை நான் தடுக்கவில்லை
உன் பிரிவின் காரணம்  சொல்;
அது ஒன்றே போதும் - என்
மனதை நான் பக்குவபடுத்திக்கொள்ள...!!
இன்னும் பல சொல்ல ஆசைதான் - தற்போது
உன் எண்ணம் தொட்டவரை
இதுவே வெறும் காகிதம்தான்...
உன் நேரத்தை இனியும் வீணாக்க மாட்டேன்...
நன்றி !!