அதே இரவுதான்
இதே நேரம்தான்
அவள் வடித்த கண்ணீரை
நான் நினைத்தது...
அதுவரை ஈர மண்ணில் முளைத்த
பனையாய் இருந்த என் மனம்
முதன் முதலாய் தளர ஆரம்பித்தது...
நாட்கள் செல்ல செல்ல
ஒவ்வொரு நிமிடமும்
கேள்விகள் உதிக்க ஆரம்பித்தன...
உறுதியாய் இருந்த என் மனதில்
தேனிக்கள் கூடு கட்ட தொடிங்கியது;
அவற்றின் வலியில் துடிப்பதா
இல்லை தேனை சுவைப்பதா
தெரியவில்லை....
கண்ணீர் கரையான்களால் அரிக்கப்பட்டேன் !
என்னை நானே கேட்டுக்கொண்டேன்
ஏன் இந்த தயக்கம்,
ஏன் இந்த கலக்கம்;
விடைகள் புரியவில்லை...
புத்தியில் உண்மை புரிந்தாலும்
நினைவுக்கு வருவதோ
அவள் வடித்த கண்ணீர்தான் !!
இதே நேரம்தான்
அவள் வடித்த கண்ணீரை
நான் நினைத்தது...
அதுவரை ஈர மண்ணில் முளைத்த
பனையாய் இருந்த என் மனம்
முதன் முதலாய் தளர ஆரம்பித்தது...
நாட்கள் செல்ல செல்ல
ஒவ்வொரு நிமிடமும்
கேள்விகள் உதிக்க ஆரம்பித்தன...
உறுதியாய் இருந்த என் மனதில்
தேனிக்கள் கூடு கட்ட தொடிங்கியது;
அவற்றின் வலியில் துடிப்பதா
இல்லை தேனை சுவைப்பதா
தெரியவில்லை....
கண்ணீர் கரையான்களால் அரிக்கப்பட்டேன் !
என்னை நானே கேட்டுக்கொண்டேன்
ஏன் இந்த தயக்கம்,
ஏன் இந்த கலக்கம்;
விடைகள் புரியவில்லை...
புத்தியில் உண்மை புரிந்தாலும்
நினைவுக்கு வருவதோ
அவள் வடித்த கண்ணீர்தான் !!